அன்புள்ள வாசகர்களே! விரைவில் நமது ஏகத்துவம் தளத்தில் பல புதிய ஆக்கங்கள் வர இருக்கின்றது. தொடர்ந்து இணைந்திருங்கள். இனி ஏகத்துவம் தளம் தொடர்ந்து செயல்படும். இன்ஷா அல்லாஹ்!

Thursday, July 17, 2008

வீட்டுக்கும் குஷ்டரோகம் வருமாம்! - பைபிள் ஜோக்ஸ்

பைபிளில் முரண்பாடான வசனங்கள், ஆபாசமான வசனங்கள் என்று இருப்பது போன்று ஜோக்கான வசனங்களும் நிறைய கானக்கிடைக்கின்றன.

நாம் உடுத்தும் ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று உளரிவைத்தவர்கள் அடுத்து வீட்டுக்கும் குஷ்டரோகம் வரும் என்று கடவுளின் பெயரால் பைபிளில் உளரிவைத்துள்ளதைப் பாருங்கள்:

நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால், அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன். அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத்தோஷத்தைப் பார்க்கப் போகுமுன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய், அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன். அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக் கண்டால், ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து, ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால், தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு, வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும், வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப்பூசவும் கட்டளையிடுவானாக. கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால், ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன். தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும். ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும். வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். ஆசாரியன் திரும்பவந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன். அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று, கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து, குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து, உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன். அப்பொழுது அது சுத்தமாயிருக்கும். இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும், வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும், . தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம். குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார். ( லேவியராகமம் 14:34-57 )
கடவுளுடைய சட்டங்களை எப்படிப்பட்ட மடத்தனமான சட்டங்களாக சித்தரித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்களா சகோதரர்களே! மேலே சொன்னது போல் வீட்டுக்கு குஷ்டரோகம் வரும், ஆடைகளுக்கு குஷ்டரோகம் வரும் என்று வேறு எவராவது சொன்னால் 'இவனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது' என்று சொல்லும் நாம், அதை விட மிக மிக மடத்தனமாக - முட்டாள்தனமாக உளரும் இந்த பைபில் வசனங்களை மட்டும், இந்த அண்ட சராசரங்களை எல்லாம் படைத்து பரிபாலித்துவரும் இறைவனின் வார்த்தைகள்' என்று எப்படி நம்பமுடியும்? சிந்திக்க வேண்டாமா?
உலகிலேயே அதிகமான நாத்திகர்களை உண்டாக்கிய மதம் எதுவென்றால் அது கிறிஸ்தவமே! காரணம் இது போண்ற மடத்தனமான பைபிள் வசனங்களே! கடவுளே இப்படியெல்லாம் போதிப்பாரா? என்று அவர்கள் தங்கள் சிந்தனையை சுழற்றும்போது தான் 'கடவுளே இல்லை' என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றார்கள். இது போன்ற வசனங்களைப் பார்த்து யாருக்குத்தான் சந்தேகம் வராது சகோதரர்களே!

வீட்டுக்கு குஷ்டரோகம் வந்தால் அந்த இடம் கலர் கலாரா இருக்குமாம், மற்ற சுவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக இருக்குமாம், வீட்டுக்கு வந்த அந்த நோயை கண்டுபிடிப்பதற்கான டாக்டர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த ஆசாரியர்களாம், அவர்களிடம் தான் ட்ரீட்மென்ட எடுக்கச் சொல்லி முறையிட வேண்டுமாம், அப்படி வீட்டுக்கு குஷ்டம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டை ஏழு நாள் அடைத்து வைக்க வேண்டுமாம், குஷ்ட ரோகம் வந்த அந்த வீட்டில் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களை அசுத்தமான இடத்தில் தான் போடவேண்டுமாம், வீட்டு குஷ்டரோக டாக்டர்களான ஆசாரியன் அதற்கான ட்ரீட்மென்ட் எடுத்தும், அதையும் மீறி குஷ்டரோகம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வீட்டையே இடித்து அந்த கல்லையும், மரங்களையும் ஊருக்கு வெளியே அசுத்தமான இடத்தில் போடவேண்டுமாம், அப்படி குஷ்டம் வந்த வீட்டுக்குள் எவனாவது சென்றிருந்தால் அவனுக்கு மாலை வரை தீட்டாம், அவன் உடுத்தின உடைகளை கழுவவேண்டுமாம், அந்த வீட்டில் எவனாவது சாப்பிட்டிருந்தால் அவனும் தனது உடையை கழுவவேண்டுமாம், இதை எல்லாம் மீறி அந்த வீட்டுக்கான தோஷம் கழிக்கிறதற்கு சில வழிமுறைகளும் இருக்கின்றதாம்; என்று இப்படி ஜோக்குகள் அடுக்கிக்கொண்டே போகின்றது...

விஞ்ஞானம் வளர்ந்த இந்த இருபதாம் நூற்றாண்டில், பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா? இதை எல்லாம் எப்படி இறைவனின் வசனங்கள் என்று நம்பமுடியும்? சிந்தித்துப் பாருங்கள் கிறிஸ்தவர்களே!

இதே போல் அநேக தமாஷான சட்டங்களும், குறிப்பாக மக்களை மடையர்களாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்தும் புரோகிதர்களான - குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த - ஆசாரியர்களுக்கு பிஸினஸ் (Business) வாய்ப்புகளுக்கான வழிகளும் லேவியராகமத்தில் மட்டுமல்லாது பைபிளின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இவை அனைத்தையும் கடவுளே போதித்ததாக யூத புரோகிதர்கள் எண்ணற்ற பொய்யான சட்டங்களை எழுதிவைத்துள்ளனர். இறைவன் நாடினால், அந்த அத்தனை தவறுகளும் தொடர்ந்து எமது தளத்தில் வெளிவரும்.

அவர்களில் (இஸ்ரவேலர்களில்) ஒரு பகுதியினர் உள்ளனர். வேதத்தில் இல்லாததை வேதம் என்று நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக வேதத்தை வாசிப்பது போல் தமது நாவுகளை வளைக்கின்றனர். 'இது இறைவனிடம் இருந்து வந்தது' எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடம் இருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவனின் பெயரால் பொய் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 3:78) .
.

கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Monday, July 14, 2008

பைபிளில் மறைக்கப்பட்ட இயேசுவின் குழந்தை அற்புதம்

மறுப்பும்... விளக்கமும்...

இயேசுவின் வரலாற்றை நான்கு நபர்களால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் பைபிளில் அவரைப்பற்றிய உண்மையான சில செய்திகளுடன், பல பொய்யான தகவல்களும், அவரது புனிதத்தன்மைக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல இட்டுக்கட்டப்பட்ட செய்திகளும் நிறைந்து காணப்படுவதோடு அவரது வாழ்வில் நடந்த பல முக்கியமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன என்ற உன்மையை நாம் கவனித்தாக வேண்டும். குறிப்பாக,


இவை போன்ற எண்ணற்ற தவறான - இட்டுக்கட்டப்பட்ட செய்திகளின் உன்மைகளை தெரியப்படுத்தும் முகமாகத்தான் வல்ல இறைவன் தனது இறுதி வேதமான திருக்குர்ஆனை இறுதி நபி மூலம் இறக்கி வைத்து சத்தியத்தை வெளிப்படுத்தினான்.

இப்படிப்பட்ட மறைக்கப்பட்ட உன்மைகளில் ஒன்றுதான் பைபிளில் சொல்லப்படாத இயேசுவின் குழந்தை அற்புதம். அதை திருக்குர்ஆன் அதன் பல்வேறு வசனங்களின் மூலம் தெளிவுபடுத்துகின்றது.

இயேசுவின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான ஒரு சம்பவம். அதுவும் இயேசுவின் பரிசுத்த தாயான கன்னிப்பெண் மரியாள், தான் திருமணம் முடிக்காத நிலையில் - அவரை எந்த ஒரு ஆணும் தீண்டாதிருக்கும் பொழுது இறை அதிசயத்தின் மூலம் இயேசுவை பெற்றெடுக்கின்றார். அதுவரை இந்த உன்மை இறைவனையும் (அவனால் அறிவிக்கப்பட்டவர்களைத்) தவிர வேறு யாருக்கும் தெரியாதிருக்கும் நிலையில், அன்றைய கால மக்கள் முன் திடீரென திருமணமாகாத ஒரு கண்ணிப்பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து வரும் பொழுது என்ன நினைப்பர்? அதுவும் பெண் மக்களையே இழிபிறவிகளாக எண்ணிக்கொண்டிருந்த யூத சமூகத்திற்கு முன்னால் ஒரு பெண் திருமணம் முடிக்காத நிலையில் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த நிலைக்கு ஆளாகி இருப்பார்? சிந்தித்துப் பாருங்கள்!

விபச்சாரத்தின் மூலம் பெற்றெடுத்தாயா? என்றிருப்பார்கள். அதற்கான தண்டனை வழங்கியே ஆகவேண்டும் என்று கூக்குரலிட்டிருப்பார்கள். காரணம் இயேசுவின் காலத்தில் ஒரு பெண் விபச்சார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவளைக் கல்லால் அடித்துக் கொல்லவேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது. (பார்க்க யோவான் 8:3-5) அவ்வளவு ஏன்? விஞ்ஞானம் வளர்ந்த இன்றை காலத்தில் கூட ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டாலும் இது தான் நடக்கும். இந்த சந்தேகம் தான் வரும். இது இயல்பான ஒன்று. ஆனால் மரியாள் அவர்கள் அது போன்ற தண்டனையிலிருந்தும், இப்படிப்பட்ட அவதூறு பேச்சுகளிலிருந்தும் தப்பித்துள்ளார் என்றால் அது எப்படி சாத்தியமானது?

பைபிளில் இயேசுவைப் பெற்றெடுத்த பிறகு மேற்கூறப்பட்ட எந்தப் பிரச்சனையையும் மரியாள் சந்திக்கவில்லை என்று ஒத்துக்கொள்கின்றது. அவர் மேறகூறப்பட்ட பிரச்சனைகள் எதையும் சந்தித்ததாக பைபிளில் எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆனால், திருமணம் முடிக்கப்படாத - கண்ணிப்பெண்ணான அவர் இப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்த வரலாற்றை பைபிளில் சொல்லப்படவில்லையே அது ஏன்? அது திட்டமிட்டு மறைக்கப்பட்ட மர்மம் என்ன? இயேசுவின் வரலாற்றை பைபிள் முழுமையாக சொல்கின்றதென்றால் அவரது வாழ்வில் நடந்த மிக முக்கியமான சம்பவமான இதுவும் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே! அது சொல்லப்படவில்லையே! அது ஏன்? இது தான் நியாய சிந்தனையுடைய எல்லோருக்கும் ஏற்படும் கேள்வி.

அப்படிப்பட்ட மிக முக்கியமான - பைபிளில் சொல்லப்படாத இந்த வரலாற்று உன்மையை -நமக்கெல்லாம் ஏற்படும் அந்த நியாயமான கேள்விக்கான விடையை திருக்குர்ஆனின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். இது தான் திருக்குர்ஆனுக்கும் பைபிளுக்கும் உள்ள வித்தியாசம். விளக்கத்திற்கு வருவோம்:

அல்லாஹ் கூறுகின்றான் :

வானவர்கள் மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45)

அதாவது திருமணம் முடிக்காத கண்ணிப்பெண்ணான மரியாளிடம் இறைவன் புறத்திலிருந்து இந்த சுபச் செய்தி சொல்லப்படுகின்றது. இந்த செய்திகுறித்து அதிர்ச்சியுற்ற பரிசுத்த மரியாள் 'இது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்புகின்றார். அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு தெரிவிக்கின்றது :

(மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47)

இந்த உறையாடல் நடந்தப் பிறகு மரியாள் கர்ப்பம் அடைகின்றார். இறைவனின் வல்லமையை அவரது கருவறை உணர்கிறது. அதை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது :

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார். பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். -அல்குர்ஆன் 19:22

பின்னர் மரியாள் குறிப்பிட்ட காலத்தில் இயேசு அவர்களைப் பெற்றெடுக்கின்றார்.

அதன் பிறகு குழந்தையுடன் தன் சமூகத்து மக்களிடத்தில் வருகின்றார். அதன் பிறகு நடந்தது பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.


'ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை. உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை' (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார். 'நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?' என்று கூறினார்கள்.
'நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான். இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

'இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

'இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்' என்று (அக்குழந்தை) கூறியது.
- அல்குர்ஆன் 19:28-33

அவரது சமூகத்துமக்களுக்கு ஏற்பட்ட இயல்பான அந்த சந்தேகத்தை, குழந்தையாக இருந்த இயேசுவைப் பேச வைத்ததன் மூலம் அவர்களுக்கு உன்மையை உணர்த்தினான் இறைவன். ஆதனால் தான் மரியாளையும் அந்தக் குழந்தையையும் அந்த சமூகம் அங்கீகரிக்கின்றது.

குர்ஆன் சொல்லக்கூடிய இந்த சம்பவம் பைபிளில் சொல்லப்படவில்லையானாலும் நியாயமாக சிந்தித்தால் குர்ஆனில் சொல்லப்பட்ட இந்த சம்பவம் கண்டிப்பாக நடந்திருக்கும் - நடந்திருக்க வேண்டும் என்பதை நியாய சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. காரணம், ஒரு கண்ணிப்பெண், அதுவும் திருமணமாகாதவர் ஒரு குழந்தையுடன் வந்தால் எந்த சமூகம்தான் சந்தேகக்கண் கொண்டு பார்க்காது? கண்டிப்பாக குர்ஆன் சொல்வது போல் இந்த சம்பவம் நடந்தே இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அது போன்ற இக்கட்டான நிலையிலிருந்த மரியாள் தப்பித்திருக்கின்றார். அது எப்படி?

இதற்கு பைபிளில் விடையிருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதில்.

பைபிளில் சொல்லப்படாத - மறைக்கப்பட்ட இந்த உண்மைகளையெல்லாம் விளக்கிவிட்டு இறைவன் சொல்கின்றான்:

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்). எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). - அல்குர்ஆன் 19:34
இது போண்ற இயேசுவின் உன்மைநிலை பற்றிய எண்ணற்ற கேள்விகளுக்கான விடை திருக்குர்ஆனில் மட்டும் தான் இருக்கின்றது சகோதரர்களே.


இது ஒருபுறமிருக்க இந்த சத்தியமான வரலாற்று உன்மை பைபிளில் சொல்லப்படவில்லை என்பதையும் திருக்குர்ஆன் இதற்கு மிகத் தெளிவாக விளக்கமளித்து உள்ளதையும் ஏற்க மறுக்கும் சில கூலிக்கு மாறடிக்கும் கும்பல் தங்களைச் சார்ந்தவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக - தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக மறுப்பு என்றப் பெயரால் சில மடத்தனங்களை எழுதி வெளியிட்டுள்ளனர். அதற்கான மறுப்பையும் தெளிவான விளக்கத்தையும் இங்கு பார்ப்போம்.

கிறிஸ்தவர் எழுதுகிறார்:

// 1. ஒரு நாள் குழந்தை அல்லது சில நாள் குழந்தை பேசுவது என்பது, உலக அதிசயம்: குர்-ஆன் சொல்வது போல, மரியாள், குழந்தையை கொண்டுவருகிறார்கள், யூத ஜனங்கள் கேள்விகள் கேட்கிறார்கள், உடனே குழந்தை பேசுகிறது. என்னவாகியிருக்கும், இதை பார்க்கும் ஜனங்கள் தலை தெரிக்க ஓடியிருப்பார்கள், ஏதோ விபரீதம் நடக்கிறது என்றுச் சொல்லி ஓடி ஒளிந்துயிருப்பார்கள். சிலருக்கோ இதயமே நின்றுயிருக்கும். எல்லாரும் பயந்து போய், நடுங்கியிருப்பார்கள். //

நமது பதில்:
ஒரு அதிசயம் நடக்கும் போது அதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்களா அல்லது இவர் சொல்வது போல் பயந்து ஓடிப்போய் ஒளிவார்களா? இவர் வாதப்படி பார்ப்போமேயானால், இயேசு எத்தனையோ அதிசயங்களை செய்தாக பைபிள் சொல்கின்றது. அதைப் பார்த்து எல்லா மக்களும் ஓடிப்போய் ஒளிந்தார்கள் என்று சொல்ல வருகின்றாரா? குழந்தை அதிசயம் என்ன! இயேசு மரணித்தவரையே இறைவனின் உதவி கொண்டு உயிர்பித்ததாக பைபிள் சொல்கின்றதே. அப்பொழுது எல்லா மக்களும் ஆ! பேய்! பேய்! என்றல்லவா ஓடி இருக்க வேண்டும். அப்படி ஓடினார்களா? ஒடிப்போய் ஒளிந்து கொண்டார்களா? அல்லது யாரும் இதயம் நின்றநிலையில் இருந்தார்களா? இது போன்று மக்களை ஓடிப்போய் ஒளிய வைப்பதற்காகவா கடவுள் அதிசயத்தைக் தனது தூதர்கள் மூலம் நிகழ்த்துகின்றார்? சிந்திக்க வேண்டாமா? எதையாவது எழுதவேண்டும் என்பதற்காக உளறி வைக்கக்கூடாது நண்பர்களே!

கிறிஸ்தவர்:

//2. இயேசுவை சிறுவயதிலிருந்தே ஒரு தெய்வீக புருஷராக மதித்துயிருப்பார்கள், அவரை எதிர்த்து, சிலுவையில் அறைந்து (குர்-ஆன் படி சிலுவையில் அறைய பிடிக்க சென்று) இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை இப்படிப்பட்ட அற்புதம் செய்யுமானால், அந்த குழந்தையை ஒரு சாதாரண குழந்தையாக பார்க்கமுடியாது. இயேசுவிற்கு சிறுவயதிலிருந்தே ஒரு தனி மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் கிடைத்துயிருக்கும். காணிக்கைகள், பணம் என்று பரிசுகளைக் கொண்டுவந்து பலவாறு தங்கள் நம்பிக்கையை அக்குழந்தை மீது காட்டியிருப்பார்கள். //

நமது பதில்:

என்ன மடத்தனமான கேள்வி இது. பைபிளைபற்றி தெரியாதவர் கேட்பது போல் கேள்வி கேட்டுள்ளார். இயேசு சிறுவயதில் செய்த அற்புதத்தை விட்டுவிடுவோம். அவரது 30 வயதிற்குப் பிறகு இறந்தவனையே உயிரோடு எழுப்பினாரே! அதற்கு மேலும் எத்தனையோ அதிசயங்களை மக்கள் முன் செய்துக் காட்டினாரே. அப்படி நடந்தும் தானே அவரை பைபிளின் படி துன்புறுத்தினார்கள், சிலுவையில் அறைந்தார்கள்.

'காணிக்கை, பணம், மதிப்பு மரியாதைஎல்லாம் வந்திருக்கவேண்டுமே' என்று கேட்கின்றார். அவர் செய்த அதிசயங்களை நேரடியாக பார்த்தவர்களான இயேசு வோடிருந்த சீடர்களே சரியான முறையில் விசுவாசிக்காமல் இருந்ததாக பைபிளே சொல்லும் பொழுது, இந்த அதிசயத்தை எல்லாம் நேராக பார்த்தவர்களில் ஒருவரான யூதாசே நன்றி இன்றி அவரைக் காட்டிக்கொடுத்ததாக பைபிளே ஒத்துக்கொள்ளும்பொழுது இந்தக் கேள்வி கேட்க எப்படி மனம் வருகின்றது உங்களுக்கு? அப்படியானால் இயேசுவிற்கு காணிக்கை, மரியாதை எதுவும் வரவில்லை என்பதற்காக அவர் அதிசயமே செய்யவில்லை என்று சொல்லவருகின்றீர்களா? உங்கள் நம்பிக்கைக்கு உட்பட்டு மறுப்பெழுதுங்கள். எதிர்த்து எழுத வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதி மாட்டிக்கொள்ளாதீர்கள்!

கிறிஸ்தவர்:

//நீங்கள் சொல்வது போல, பெரியவராக ஆனபிறகு செய்த அற்புதங்களுக்கு வேறு அர்த்தங்கள் சொன்னாலும், இந்த அற்புதம் வைத்துக்கொண்டு எல்லாம் சாதித்துவிடலாம். ஆனால் நடந்தது என்ன? ஒரு சாதாரண தச்சனின் மகனாக நடுத்தர வாழ்வை வாழ்ந்தார் இயேசு. எந்த வசதியில்லாமல் வாழ்ந்தார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த ஆசாரியர்கள், யூத மக்கள், இவனுக்கு எப்படி இந்த வல்லமை கிடைத்தது, இவன் தச்சனின் குமாரன் அல்லவா? என்று ஆச்சரியப்பட்டார்கள்(மாற்கு: 6: 1-3). இன்னும் குர்-ஆன் சொல்வது போல, குழந்தை அற்புதம் நடந்து இருக்குமானால், இவ்விதம் அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இவன் தான் குழந்தையாக இருக்கும் போதே அற்புதம் செய்தவன் ஆயிற்றெ, இந்த அற்புதங்கள் என்ன புதுசா? என்றுச் சொல்லியிருப்பார்கள். எனவே, குழந்தை இயேசு அற்புதம் என்பது ஒரு கற்பனைக் கதையே தவிர வேறில்லை. //
நமது பதில்:

அதாவது குழந்தை அற்புதத்தை மறுப்பதற்காக என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கின்றார்கள் என்று புரிகின்றதா சகோதரர்களே! இயேசு பெரியவரான போதும் அதிசயம் செய்தார். அப்பொழுது மட்டும் அவர் வசதியுடன் வாழ்ந்து விட்டாரா? அவர் வசதியாக வாழவில்லை என்பதற்காக அவர் அதிசயம் செய்யவே இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா?

ஒரு வாதத்திற்காக மாற்கு 6:1-3 ல் சொல்லப்பட்ட வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொண்டாலும் அதுவும் இவரது கருத்துக்கு ஒத்துப் போகாது. ஏனெனில், இந்த மாற்கு வசனத்தின் படி எவர்கள் ஆச்சரியப்பட்டதாக இவர் எடுத்துக்காட்டுகின்றாரோ அவர்கள் தான் அவரை கொலைசெய்ய துடித்தார்கள். காரணம் அவர்கள் இயேசு செய்த எந்த அதிசயத்தையும் இறைவன் புறத்திலிருந்து வந்த அதிசயமாகவே எடுத்துக் கொள்ள வில்லை. அவரை இறைவன் புறத்திலிருந்து வந்தவராகவும் நம்பத் தயாராக இல்லை. நம்பத் தயாராகாதவர்களிடம் புதுசு பழசு என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுக்கு எத்தனை அதிசயம் செய்து காட்டினாலும் அவர்கள் நம்பப்போதில்லை. இவ்வளவு அதிசயங்களை செய்தப் பிறகுத்தான் இயேசு கொல்லப்பட்டதாக பைபிள் கூறுகின்றது.

கிறிஸ்தவர்:

//இதற்கு பதில் சொல்லுங்கள், சுவிசேஷங்கள் எழுதிய சீடர்கள் இயேசுவின் எதிரிகளா? இல்லையே, தங்கள் தலைகளை இயேசுவிற்காக வெட்டித்தள்ள நீட்டியவர்கள். ஒருவேளை இந்த அற்புதம் நடந்துயிருக்குமானால், அதை எழுதுவதினால், தங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஏன் ஒருவரும் சொல்லவில்லை, இயேசுவின் மீது கோபமா அல்லது இது ஒரு சாதாரண அற்புதமா? பின் ஏன் யாரும் எழுதவில்லை. காரணம் அது நடக்கவில்லை//

நமது பதில்:

பைபிளில் சொல்லப்பட்ட சுவிஷேங்களை எழுதியது இயேசுவின் சீடர்கள் என்று யார் சொன்னது? சுவிஷேஷ எழுத்தாளர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல என்பதை பைபிள் ஆதரத்துடன் எத்தனையோ பைபிள் அறிஞர்களே ஒத்துக்கொண்ட உன்மையை நீங்கள் அறியாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. காரணம் மடமை உங்கள் அறிவை மறைக்கின்றது. மத்தேயு என்ற சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான மத்தேயுவா? அல்லது யோவான் சுவிஷேஷத்தை எழுதியவர் இயேசுவின் சீடரான யோவானா? பைபில் ஆதாரத்துடன் உங்களால் நிரூபிக்க முடியுமா? மாற்கும் லுக்காவும் பவுலுக்கு வேண்டப்பட்டவர்களா அல்லது இயேசுவின் நேரடி சீடர்களா? பவுலும் பலுலைச் சார்ந்தவர்களும் இட்டுக்கட்டி எழுதியதே இன்றைய புதிய ஏற்பாடு என்பதை மறந்துவிடாதீர்கள். அவரின் உன்மையான வரலாற்றை மறைத்து விட்டு அவர் மீது இட்டுக்கட்டிய பொய்யான பல தகவல்களைக் கொண்டது தான் இன்றைய பைபிள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். இன்ஷா அல்லாஹ் அது பற்றிய விளக்கக்கட்டுரை விரைவில் நமது தளத்தில்...

அடுத்து சகோதரர் தேங்கை முனீப் அவர்கள் மொழிபெயர்த்து இஸ்லாம் கல்வியில் வெளியிட்ட கட்டுரையில் கிறிஸ்தவர்களில் ஒரு சிலர் செல்லிவரும் பொய்களில் ஒன்றான பைபிளிலிருந்து குர்ஆன் காப்பியடிக்கபட்டது என்பதற்கு பல ஆதரங்களை முன்வைத்து மறுப்பெழுதியிருந்தார். (இன்ஷா அல்லாஹ் குர்ஆன் பைபிளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டதா என்பதற்கான மிகத் தெளிவான விளக்கம் விரைவில் நமது தளத்திலும் வர இருக்கின்றது) அவர் கொடுத்திருந்த எத்தனையோ ஆதரங்களில் இந்த 'குழந்தை அதிசயம்' என்ற ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு குர்ஆன் காப்பி அடிக்கப்பட்டதே என்று மறுப்பெழுதி இருந்தனர். அது எந்த அளவுக்கு மடத்தனமானது என்பதை சற்று அலசுவோம்:

குர்ஆனில் சொல்லப்பட்ட குழந்தை அற்புதம் என்பது நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே பைபிளின் தள்ளுபடி ஆகாமங்களில் ஒன்றான (Gospel of Thomas) 'தோமாவின் சுவிஷேஷத்தில்' உள்ளதாகவும் அதிலிருந்து தான் நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்து எழுதினார்களே யொழிய இறைவனின் புறத்திலிருந்து ஒன்றும் புதிதாகச் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை என்கிறார். அதை பின்வருமாறு எழுதுகின்றார்:

//இஸ்லாம் கல்வி சகோதரர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான், அதாவது, இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட இந்த குழந்தையாக இருக்கும் போது பேசிய அற்புதம், மற்றும் களிமண் பறவையை உயிர் பெறச்செய்த அற்புதம், இவைகள் முகமது பைபிளிலிருந்து காப்பி அடிக்கவில்லை, மாறாக கிறிஸ்தவர்கள், யூதர்கள் எல்லாரும் தள்ளுபடி ஆகமங்கள் என்றும், இவைகள் இறைவனின் வெளிப்படுகள் அல்ல என்றும் ஒதுக்கி தள்ளிவிட்ட புத்தகங்களிலிருந்து அவர் காப்பி அடித்துள்ளார் என்பதை மட்டும் நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்.//
இது எவ்வளவு மடத்தனமான வாதம் என்பதை சாதாரணமாகவே நமக்கு விளங்கும். இயேசுவின் குழந்தை அதிசயம் இடம்பெறாத, கிறிஸ்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட பைபிளே நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் 200 ஆண்டுகளுக்கு பின்புதான் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என்னும் போது தமிழ் உட்பட உலகின் ஏராளமான மொழிகளில் இன்றுவரையில் மொழிபெயர்க்கப்படாத தள்ளுபடி ஆகமங்களை பார்த்து காப்பிஅடிக்கபட்டது என்ற வாதம் எப்படி சரியாகும்? இவர் சொல்லக்கூடிய தள்ளுபடி ஆகாமங்கள் எழுதப்பட்டு கிட்டத்தட்ட 1800 ஆகிவிட்ட நிலையில் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் அது இன்று வரை மொழிபெயர்க்கப்படவில்லை. காரணம் அதை பின்பற்ற வேண்டிய கிறிஸ்தவர்களே ஒதுக்கித் தள்ளிவிட்ட பிறகு வேறு யாருக்கும் அது தேவைப்படாத ஒன்று. அப்படி இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு ஆகாமம் எப்படிக் கிடைத்திருக்கும்? அதுவும் எழுதப்படிக்கத்தெரியாத நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சொல்லும் புழக்கத்தில் உள்ள இன்றைய பைபிளை விட்டு விட்டு தள்ளுபடி செய்யப்பட்ட - புழக்கத்தில் இல்லாத - ஆகாமங்களை எங்கிருந்து பெற்றார்கள்? ஒருவேளை நபி (ஸல்) காலத்தில் இன்று நீங்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்கள் தான் கிறிஸ்தவர்களின் வேதமாக இருந்தது என்று சொல்லவருகின்றீர்களா?

அடுத்து, இன்னொன்றையும் நாம் புரிந்துக்கொண்டாக வேண்டும். இன்று நடைமுறையில் உள்ள இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பைபிளை 500 முதல் 1000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரும் பெரும் கிறிஸ்தவ குருமார்களைத் தவிர வேறு யாரும் படிக்க முடியாது. அந்த அளவுக்கு மிகக் கடுமையாக பொதுமக்களைத் தடுத்து வைத்திருந்தார்கள். அந்த பைபிள்களோ மதகுருமார்கள் மட்டும் படிக்கும் வகையில் கிரேக்க, எபிரேயு மற்றும் லத்தீன் மொழிகளில் மட்டும் தான் இருக்கும். பாமரர்கள் யாரும் படித்துவிட முடியாத படி சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்தனர் என்றும் அப்படி மீறி படிக்க நினைக்கும் மதகுருமார்கள் அல்லாதவர்கள் பலர் சிலுவையில் அறையப்பட்டும் இன்னும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டும் துன்புறுத்தப்பட்டனர் என்று கிறிஸ்தவ வரலாறே நமக்கு சான்று பகர்கின்றது. இன்னும் சொல்லப்போனால் இந்த அவதூறு கிறிஸ்தவர்கள் பின்பற்றக்கூடிய கிறிஸ்தவத்தின் ஒரு பிரிவான 'ப்ரொட்டஸ்டன்ட்' பிரிவே இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட பைபிளை படிப்பதற்கு அதைப் பின்பற்றும் கிறிஸ்தவர்களுக்கே இந்த நிலைமை என்றிருக்கும் பொழுது, இவர்களால் தள்ளுபடி செய்யப்பட்ட ஆகாமங்களை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபி (ஸல்) அவர்கள் மட்டும் எப்படி காப்பி அடித்திருப்பார்கள்? யோசிக்க வேண்டாமா?

எனவே உங்களது வரட்டு வாதங்கள் எல்லாம் உங்களைப் போன்ற குருட்டு நம்பிக்கை உடைய குறுமதியாளர்களைத் திருப்தி படுத்தவே உதவும் என்று சொல்லி முடிக்கின்றேன். வஸ்ஸலாம்.
.
.
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here
.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here
.

Friday, July 11, 2008

பைபிளின் பலிக்காத சாபம்...!

எதார்த்தமான நிலைமைக்கு முரணான செய்திகள் கடவுளின் வார்த்தையில் இருக்க முடியாது. படித்தவுடன் மடத்தனமானதாகத் தோன்றும் செய்திகளும் கடவுளின் வார்த்தைகளில் இருக்க முடியாது - இருக்கவும் கூடாது. கடவுளின் வார்த்தைகளில் இத்தகைய குறைபாடுகள் இருக்கலாகாது என்பதை பைபிளும் கூட ஒப்புக்கொள்கின்றது.

'ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை, அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான், அவனுக்கு நீ பயப்படவேண்டாம்' - உபாகமம் 18:22

பைபிளே ஒத்துக்கொள்ளும் இந்தத் தகுதி பைபிளுக்கு இருக்கின்றதா? இதை நாம் ஆராய்வோம்.


பலிக்காத சாபம்
கடவுள் ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாளையும் படைத்தான். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கணிகளை மட்டும் உண்ணக்கூடாது என்று அவர்களுக்கு கடவுள் தடை விதித்திருந்தான். அவர்களிருவரும் கடவுளின் இந்தக் கட்டளையை மீறி அந்தக் கணியை உண்டார்கள்.

இந்தச் சம்பவத்தை ஒட்டி, பைபிள் கூறும் சில விஷயங்களை மேற்கண்ட அளவுகோலால் அளந்து பார்க்கும் போது பைபிள் இறைவேதத்திற்கான தகுதியை இழந்து விடுகின்றது என்பதை எவரும் உணரலாம். பைபிள் கூறுகின்றது :

அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன். வேதனையோடே பிள்ளை பெறுவாய் (ஆதியாகமம் 3:16)


கர்த்தரின் கட்டளையை மீறியதற்காகக் கடவுள் இட்ட சாபம் இது!
இது எத்தனை வகைகளில் பொருந்தாமல் போகின்றது என்பதை உங்கள் அறிவால் உரசிப்பாருங்கள் நண்பர்களே!

பெண்களுக்குப் பிரசவ வலி ஏற்படுகின்றது என்பது உன்மைத்தான். கடவுள் சொல்லாவிட்டாலும் கூட இது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் சரியா? பொருத்தமானதுதானா என்பதே ஆராயவேண்டிய விஷயம்.


1. கடவுள் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட கணியை உண்டதற்காகத்தான் இந்தச் சாபம் என்றால் கட்டளையை மீறியது ஏவாள் மட்டுமல்லவே? ஆதாமும் கூட கட்டளையை மீறியவர் தாமே! பாவத்தில் சமபங்கு கொண்ட அவருக்கும் மற்ற ஆண்களுக்கும் ஏன் பிரசவமோ பிரசவ வலியோ ஏற்படுவதில்லை?

2. ஏவாள் கடவுளின் கட்டளையை மீறி கணியை உண்டதனால் அவருக்கு மட்டும்தான் பிரசவ வலி ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தில் சம்பந்தப்படாத மற்ற பெண்களுக்கும் ஏன் பிரசவ வலி ஏற்பட வேண்டும்?

3. பெற்றோரின் குற்றம் பிள்ளைகளைச் சேரும் என்று கிறிஸ்தவ உலகம் சமாளிக்குமானால் ஏவாள் பெற்றெடுத்த ஆண்களுக்கும் அந்தக் குற்றத்தில் பங்கு இருக்க வேண்டுமே? ஏவாளின் சந்ததிகளான ஆண்களுக்கு அந்த வலி ஏற்படுவதில்லையே அது ஏன்?

4. தாயின் தவறில் அவரது பெண் சந்ததிகளுக்கும், தந்தையின் தவறில் அவரது ஆண் சந்ததிகளுக்கும் தான் பங்குண்டு என்று கிறிஸ்தவ உலகம் தங்களின் கோட்பாட்டுக்கு விளக்கமளிப்பார்களானால் ஏவாள் பெற்றெடுத்த எல்லாப் பெண்களுக்கும் இந்த வலி ஏற்பட வேண்டுமே? மலடிகளுக்கும் மலட்டு ஆண்களை மணந்துக் கொண்ட பெண்களுக்கும் இந்த வலி ஏற்படுவதில்லையே? அப்படியாயின் கடவுளின் சாபம் என்னாவது? கிறிஸ்தவக் கோட்பாடுதான் என்னாவது? பிரசவிக்காத பெண்களுக்கு அந்தப் பாவத்தில் பங்கில்லையா? அவர்கள் பாக்கியம் செய்து விட்டவர்களா? அல்லது அவர்கள் தாய் வயிற்றில் பிறக்காமல் தாமாகத் தோண்றியவர்களா?

கிறிஸ்தவ கன்னியாஸ்திரீகளின் நிலையென்ன? பைபிள் கொள்கை என்னாவது? சிந்திக்க வேண்டாமா?

5. பாவத்தின் நிமித்தம் கடவுள் இட்ட சாபம் தான் பிரசவ வலி என்றால் மனித இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் அந்த வலி இருக்க வேண்டும். ஆடு, மாடு உள்ளிட்ட பிரசவிக்கும் அனைத்து உயிரினங்களும் பிரசவ வலியால் துடிக்கின்றனவே! அது ஏன்? எல்லா ஜீவராசிகளின் தாய்களும் கர்த்தரின் கட்டளைகளை மீறி விலக்கப்பட்ட கணியை உண்டு விட்டனவா?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை இந்த வசனம் எழுப்பத்தூண்டுகிறது. கர்த்தர் சொன்ன பிரகாரம் எல்லாப் பெண்களுக்கும் (மலடிகள் உட்பட) பிரசவ வலி எற்படாததால் இது கள்ளத் தீர்க்கதரிசி தன் தணிகரத்தினாலே உண்டு பண்ணிச் சொன்னது என்பது தெளிவாகிறதல்லவா?

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் கிறிஸ்தவ உலகம் சிந்திக்கட்டும்! அவர்களால் இந்தக் கேள்விகளுக்கு நியாயமான விடையளிக்கவே முடியாது. கள்ளத் தீர்க்கதரிசிகள் உண்டு பண்ணிச் சொன்னவைகளும் பைபிளில் உள்ளன என்ற உன்மையை அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.
.

தொடரும்....
கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகள் பகுதி செல்ல.. Click here.
இஸ்லாம் குற்றச்சாட்டுகளும் - பதில்களும் பகுதிக்குச் செல்ல.. Click here
.
இஸ்லாம் பற்றிய கட்டுரைகளுக்கு செல்ல... Click here.

Monday, July 07, 2008

ஆடைகளுக்கு குஷ்டரோகம் வருமாம் - பைபிள் கூறுகின்றது

தொழுநோய் என்று சொல்லப்படும் குஷ்டரோகம் மனிதனுக்கு ஏற்படும் என்று கூறினால் அதை நம்பலாம். ஆடு மாடுகளுக்கு ஏற்படும் என்று கூறினால் கூட நம்பலாம். அணிகின்ற ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று எவரேனும் சொன்னால் அறிவுடைய எவராவது நம்புவார்களா? நம்ப முடியுமா? அப்படிச் சொல்பவனின் அறிவில் தான் ஏதோ ரோகம் உள்ளது என்றே கூறுவார்கள்.

ஆனால் பைபிள், ஆடைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று கூறுவதுடன் அதற்கான வைத்திய முறையையும் (?) கூறுகிறது. இதோ பைபிள் கூறுவதை கேளுங்கள்:

''47. ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,

(The garment also that the plague of leprosy is in, whether it be a woolen garment, or a linen garment)

48. பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
49. வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டரோகம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும் அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
And if the plague be greenish or reddish in the garment, or in the skin, either in the warp, or in the woof, or in any thing of skin; it is a plague of leprosy, and shall be shewed unto the priest:

50. ஆசாரியன் அதைப்பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
And the priest shall look upon the plague, and shut up it that hath the plague seven days:

51. ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன். வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம். அது தீட்டாயிருக்கும்.
52. அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன். அது அரிக்கிற குஷ்டம். ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.

53. வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்த தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,

54. அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைத்து,


55. அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன். அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும், அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும். அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும். அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.

56. கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.

57. அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம். ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.

58. வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும். அப்பொழுது சுத்தமாயிருக்கும்.

59. ஆட்டு மயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
- லேவியராகமம் 13:47 - 59

இவை அனைத்தும் பைபிளில் இடம் பெற்றுள்ள வாசகங்கள்.

குஷ்டரோகமும் அதற்கான பரிகாரமும் எவ்வளவு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டு வியப்பு ஏற்படுகின்றதல்லவா? உங்கள் ஆடைகளில் சிவப்பாக, பச்சையாக ஏதேனும் தென்படுகிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்! அதைக்கூட நீங்கள் சோதிக்க முடியாதாம். பக்தர்களிடம் காணிக்கைப் பெற்று வாழ்ந்து வரும் புரோகிதக்கும்பலைச் சேர்ந்த 'ஆசாரியன்' தான் சோதிக்க வேண்டுமாம். இவர்கள் தங்கள் வருமானங்களுக்கா எப்படியெல்லாம் யோசித்திருக்கின்றார்கள் என்று பார்த்தீர்காளா? பாவம் பக்தர்கள்.

கர்த்தரின் பெயரால் சொல்லப்பட்டுள்ள இந்த அபார கண்டுபிடிப்பு கர்த்தரே சொன்னதா? அல்லது கர்த்தரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதா? யோசிக்க வேண்டாமா?

விஞ்ஞானம் வளர்ந்த 20ம் நூற்றான்டில் பைபிளின் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை யாராவது நிரூபிக்க முடியுமா?

சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
தொடரும்...
.
.
.
.

Friday, July 04, 2008

மாதவிடாய் பெண்களை இழிவுபடுத்தும் பைபிள்!

'என்ன கொடுமை சார் இது! '
'மாதவிடாய்' என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய ஒரு உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. அதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் பைபிள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றி கூறுவது என்ன தெரியுமா?

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக. அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும். ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்ள. அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக. அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடார வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். (லேவியராகமம் - 15:19-30 )
இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றியும் அது ஏற்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் பற்றியும் பைபிள் எந்த அளவுக்கு இழிவாய் கூறுகிறது என்று பார்த்தீர்களா? தேவைப்படும்போது பெண்களை அனுபவித்து விட்டு 'அந்த' நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா?

அவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட அந்த பொருட்களைத் தொட்டவனுக்கும் தீட்டு, அந்த பெண்ணால் தீட்டான அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர் போல தீட்டு தொடர்கிறது.

இதைவிடப பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? 'அந்த' நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்கூட கர்த்தர் உணரவில்லையா? அல்லது கர்த்தரின் பெயரால் இவையெல்லாம் இட்டுக்கட்டப்பட்டதா?

கிறிஸ்தவ பெண்களே! இந்தக் கொடுமையான வசனங்கள் உங்களைச் சிந்திக்க தூண்டவில்லையா? கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா?

மாதவிடாய் முடிந்து எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது தகனப்பளியாக விட வேண்டுமாம். அதுவும் பக்தர்களிடம் காணிக்ககைளில் வாழும் புரோகிதக்கும்பளின் மூலம் தான் செய்ய வேண்டுமாம். பைபிளை சிதைத்த யூத புரோகிதக்கும்பல் தங்களின் வருமானங்களுக்காக எந்த அளவுக்கு கீழ்த்தரமாக எழுதிவைத்துள்ளார்கள் என்று பார்த்தீர்களா?

கிறிஸ்தவ உலகில் எந்தக் கிறிஸ்தவராவது இதை கடைபிடித்து ஒழுக முடியுமா? மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்த போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச் சொல்லியிருக்க் முடியாது. ஆனால் கர்த்தர் தான் சொன்னார் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் சகோதர சகோதரிகளே!

பெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில்தான் இது போன்ற கருத்துக்கள் உருவாகியிருக்க முடியும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.


மாதவிடாய் பெண்களை இஸ்லாம் எவ்வாறு நடத்துகிறது?

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான் :

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள் நீர் கூறும்: 'அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும் ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை (உடலுறவுக்கு) அணுகாதீர்கள் அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.' (அல் குர்ஆன் 2 : 222)

இதற்கு விளக்கமாக நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தே காட்டியதாக நபிமொழிகள் நமக்கு சான்று பகர்கின்றது.

'யூதர்கள் தங்களின் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவர்களுக்கு தங்களுடன் உணவு உண்ணவோ தங்களது வீடுகளில் கலந்து (தங்களோடு) சேர்ந்து குடியிருக்கவோ விடமாட்டார்கள். (வீட்டுக்கு வெளியில் தனிமையில் ஆக்கிவிடுவார்கள்). ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இது பற்றி கேட்க, மாதவிடாய் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள், அது அருவருக்கத்தக்கதாகும் என (நபியே) நீங்கள் கூறுங்கள். ஆகவே, மாதவிடாயின் போது அப்பெண்களை (தாம்பத்திய உறவிலிருந்து) விலக்கிக் கொள்ளுங்கள் என்ற (குர்ஆனின் 2:222) வசனத்தை அதன் கடைசிவரை-கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய-அல்லாஹ் இறக்கி வைத்தான். (இவ்வசனத்தில் கூறப்பட்ட நிலையை தெளிவு செய்யும் நிமித்தம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மாதவிடாய் பெண்களோடு தாம்பத்திய உறவு நீங்கலாக எல்லாவற்றையும் செய்யுங்கள் எனக்கூறினார்கள். இக்கூற்று யூதர்களுக்கு எட்டியது (அதற்கவர்கள்) நம் காரியத்தில் நமக்கு மாற்றம் செய்வதை தவிர, அவர் எதையும் விட்டுவைக்க விரும்புவதில்லை எனக்கூறினர். உஸைத்பின் அல்ஹுளைரும், அப்பாது பின் பிஷ்ரும் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக யூதர்கள் மாதவிடாய் வரும் பெண்கள் பற்றி இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆகவே அப்பெண்களை நாம் தாம்பத்திய உறவு கொள்ளலாமா? என்றனர். இதைக்கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவர் மீதும் சினங்கொண்டு விட்டார்களோ? என நாங்கள் எண்ணும் வரை அவர்களின் முகம் மாறியது (அதை உணர்ந்த) அவ்விருவரும் வெளியேறிவிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

நூல் : முஸ்லீம் (171)

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு ஆயிஷாவே! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்து கொடு என்று கூறியதற்கு (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் நிச்சயமாக நான் மாதவிடாய்க்காரியாக இருக்கிறேன் எனக்கூற (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உன் மாதவிலக்கு உன் கையில் இல்லை எனக்கூறினர். அப்போது அத்துணியை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக்கொடுத்தனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : முஸ்லீம் (172)
நான் மாதவிடாய் வந்தவளாக இருக்கும் நிலையில் என் மடிமீது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாய்ந்தவாறு திருகுர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

நூல் : முஸ்லீம் (175)

மாதவிடாய் வந்துள்ள பெண் எந்த விதமான தொற்றும் அசுத்தத்தையும் தன்னுள் கொண்டிருப்பதாக இஸ்லாம் கூறவில்லை. அவள் 'தீண்டத்தகாதவளோ அல்லது சபிக்கப்பட்டவளோ அல்ல என்று ஆணித்தரமாக சொல்கிறது இஸ்லாம். அவள் தன்னுடைய தினசரி வாழ்க்கையை வழக்கம்போல் ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாட்டுடன் நடத்துகிறாள்: அதாவது அவள் திருமணமானவளாயிருந்தால் அவள் கணவனுடன் உடலுறவு கொள்ளக்கூடாது. அதைத் தவிர மற்ற எல்லா உடல் தொடர்புகளும் தொடுவதற்கு அனுமதிக்கப்பட்டவையே. மாதவிடாய் ஏற்படும் கால கட்டத்தில் மட்டும் பெண் தொழுவது நோன்பு வைப்பது போன்றவைகளிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்கிறாள். காரணம் இந்த நேரங்களில் இவ்வாறான விஷயங்கள் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பாதாலேயே நம்மைப் படைத்த இறைவனால் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
.